பிகாரில் தேர்தல் பரப்புரையின்போது இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற மேடை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகார் மாநிலம் பாலிகஞ்ச்சில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தி மேடையில் ஏறி தொண்டர்களிடம் கையை அசைத்தபோது திடீரென மேடை உடைந்து விழுந்ததால் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
VIDEO | A portion of the stage set for Rahul Gandhi’s rally in Bihar’s Paliganj collapsed as the Congress MP arrived with other party leaders.
#LSPolls2024WithPTI
#LokSabhaElections2024
pic.twitter.com/lDeQjTUnq6
VIDEO | A portion of the stage set for Rahul Gandhi’s rally in Bihar’s Paliganj collapsed as the Congress MP arrived with other party leaders. #LSPolls2024WithPTI #LokSabhaElections2024 pic.twitter.com/lDeQjTUnq6
— Press Trust of India (@PTI_News) May 27, 2024
மேடை உடைந்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் தடுமாறியதால் தொண்டர்கள் பதறினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேடையில் இருந்து வெளியேறினார். சகஜ நிலையை உணர்த்துவதற்காக தொண்டர்களிடையே கையசைத்தவாறு மேடையில் இருந்து ராகுல் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
.
- First Published :