கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. கென்யா ஏற்கனவே தண்ணீர் காடாக காட்சி அளிக்கும் நிலையில் தான்சானியாவிலும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது. தான்சானியாவில் பெய்த கனமழைக்கு தற்போதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 236 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 155 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மழை வெள்ளத்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
இதையும் படிக்க :
கென்யாவில் தொடரும் கனமழை… 32 பேர் உயிரிழப்பு !
இதுகுறித்து தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எல் நினோ தாக்கத்தால் பதிவான கனமழையானது மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு மக்களுக்கு கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் தபால் பெட்டி… எங்குள்ளது தெரியுமா..?
தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, எல் நினோ தாக்கத்தால் பதிவான கனமழை மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதே போன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, புருண்டி ஆகிய நாடுகளும் கனமழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…