கடலாடி அருகே மேலகிடாரம் கிராம ஸ்ரீ உய்யவந்த அம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இரவு முழுவதும் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கு சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகளின் அசத்தி சாதனை படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலகிடாரம் கிராமத்தில் ஸ்ரீ உய்ய வந்த அம்மன் கோவிலானது அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி திருவிழாவானது மேலகிடாரம் கிராம மக்களின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கோவிலின் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மேலக்கிடாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உய்ய வந்த அம்மன் சிலம்பாட்ட குழு பிரபஞ்ச கல்வி பல்கலைக்கழகம் சார்பில் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.
இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இரவு முழுவதும் தொடர்ந்து தூக்கம் இன்றி கண்விழித்து ஒரே இடத்தில் நின்றபடி 14 மணி நேரமாக சிலம்பம் சுழற்றி விடிய விடிய நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று சிலம்பம் சுற்றி அசத்தி சாதனையை படைத்தனர்.
சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் கண்விழித்து தொடர்ந்து 14 மணிநேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள் கிராமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் வாழ்த்தினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…