பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதன் மூலம் சிறு வணிகங்களுக்கு நரேந்திர மோடி முடிவுரை கட்டிவிட்டார். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளான பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) ஆகியவை, நாட்டில் அதிக இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர துறைக்கு பெரிய அடி விழுந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.22 சதவீதமாக இருந்தது, இது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (11.3 சதவீதம்) மற்றும் வங்கதேசம் (12.9 சதவீதம்) ஆகிய நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை நிலவரத்தை விட அதிகம் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுவதையும் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.